நீட் தேர்வு குறித்த அச்சம் காரணமாக மதுரையை சேர்ந்த மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் தற்கொலை செய்வதற்கு முன் நீட் தேர்வு குறித்த தனது பயத்தை ஆடியோவாக பதிவு செய்துள்ளார். அது தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நீட் தேர்வு:
தேசிய அளவில் மருத்துவ சேர்க்கைக்காக நடத்தப்படும் தேர்வு தான் நீட். இந்த தேர்வு தமிழகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வு குறித்து மாணவர் மத்தியில் பயம் இருந்து கொண்டு தான் வருகிறது. பலரும் இந்த தேர்வு குறித்த பயம் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
இப்படியாக இருக்க இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு நாளை முதல் ஆரம்பிக்க உள்ளது. தேர்வு குறித்த பயம் காரணமாக மதுரையை சேர்ந்த மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தேர்வு குறித்த பயம்:
மதுரையில் உள்ள ரிசர்வ் லைன் பகுதியை சேர்ந்தவர் முருகசுந்தரம், அவர் காவல்துறை எஸ்.ஐயாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஜோதி என்ற ஒரு மகள் உள்ளார். இவருக்கு மருத்துவராக வேண்டும் என்பது தான் கனவு. அதற்காக நீட் தேர்வு பயிற்சியையும் மேற்கொண்டு வந்துள்ளார். அனைவரும் இவர் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று எதிர்பார்த்துள்ளனர்.
ஒரே நாளில் 97,570 பேருக்கு கொரோனா உறுதி – 1,201 பேர் பலி!!
இதனால் இவருக்கு தேர்வு குறித்து பயம் அதிகமாக இருந்துள்ளது. நாளை நடைபெற உள்ள தேர்வு குறித்து பயம் அதிகமாகவே தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ஆடியோ பதிவு:
மாணவி ஜோதி தற்கொலை செய்வதற்கு முன் தேர்விற்கான தனது பயம் குறித்து ஆடியோவில் பேசியுள்ளார். அவர் அதில் கூறியுள்ளதாவது “எல்லாருமே என்ன ரொம்ப நம்புனீங்க. இது என்னோட முடிவு தான். என் பேமிலியா ரொம்ப மிஸ் பண்ணுவேன். எனக்கு நல்ல பேமிலி கெடச்சுருக்கு, ஆனா எனக்கு தான் அத பாதுகாக்க தெரியல. miss u amma.” என்று கூறியுள்ளார்.
இந்த ஆடியோ அனைவர் மனதையும் உருக்கியுள்ளது. இதனால் கல்வியாளர்கள், பெற்றோர்கள் அனைவரும் நீட் தேர்வு நடத்தக் கூடாது என்று வலியுறுத்தி வருகின்றனர். இதே போல் கடந்த சில நாட்களுக்கு முன் நீட் தேர்வு குறித்த பயம் காரணமாக அரியலூரை சேர்ந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.