Monday, May 6, 2024

சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியில் ஈடுபட்ட தீபக் சாஹர் – கொரோனா தொற்றில் இருந்து குணமானார்!!

Must Read

கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த கிரிக்கெட் வீரர் தீபக் சாஹர் கொரோனா நோய் பாதிப்பில் இருந்து குணமைடைந்ததால் போட்டிகளுக்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

கொரோனா பரவல்:

கடந்த சில மாதங்களுக்கு முன் கொரோனா பரவல் இந்தியாவில் அதிகமாக இருந்து வந்ததால் கிரிக்கெட் போட்டிகளான ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள நாடுகளில் நடத்த திட்டமிடப்பட்டன. இந்த போட்டிகள் வரும் 19 ஆம் தேதி நடக்கவுள்ளது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் அந்த நாட்டிற்கு கிளம்பினார். அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த கிரிக்கெட் வீரர் தீபக் சாஹர் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டார். இதனால் அவர் தன்னை தானே தனிமை படுத்தி கொண்டார்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

deepak sahar
deepak sahar

14 நாட்கள் முடிவுற்ற நிலையில் அவர் போட்டிகளில் பங்கேற்பாரா? என்ற கேள்விகள் எழுந்தன. அதற்காக அவருக்கு பல்வேறு உடல் தகுதி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சோதனை முடிவுகளை வைத்து தான் அவர் அணியில் பங்கேற்பாரா? என்று உறுதி செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது அவருக்கு கொரோனா முடிவுகள் நெகடிவ் என்று வந்ததால் அவர் போட்டிகளுக்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இறுதி முடிவு:

கொரோனா பாதித்த இன்னொரு வீரரான ருத்துராஜ் கெய்க்வாட்டுக்கு வரும் 12 ஆம் தேதி சுயதனிமை முடிவு பெற உள்ளது. அதனால், அவரும் போட்டிகளில் பங்கேற்ப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இவர்கள் போட்டிகளில் பங்கேற்பதாக இருந்தாலும் முதல் போட்டிகளில் பங்கேற்பது சந்தேகம் என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -