வேலைக்கு செல்பவர்கள் காலையில் ஒவ்வொரு வகையான உணவுகள் செய்ய வேண்டியிருக்கும். இட்லி தோசை, உப்புமா இந்த மாதிரியான உணவுகளை செய்வதை விட வித்தியாசமான உணவுகளை செய்து தருவதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். இப்பொழுது ரவையை வைத்து வித்தியாசமான முறையில் காலை உணவு எப்படி தயாரிப்பது என்று பாப்போம் வாங்க.
தேவையான பொருட்கள்
வறுத்த ரவை – 100 கி
வெங்காயம் – 1
தக்காளி – 2
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா – 1 தேக்கரண்டி
கொத்தமல்லி
சோம்பு
பச்சைமிளகாய் – 2
செய்முறை
முதலில் ரவையை ஒரு பௌலில் போட்டு அதில் மிளகாய்த்தூள், பெரிய வெங்காயம், மஞ்சத்தூள், கரம் மசாலா, சிறிது தயிர் சேர்த்துக்கொள்ளவும். அதன்பின் அதில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மாவு பாதத்திற்கு கலக்கவும். அதன்பின் பணியார சட்டியில் இந்த மாவினை ஊற்றி திருப்பி போட்டு எடுத்துக்கொள்ளவும். தக்காளியை அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அதன்பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சோம்பு சேர்த்து வதக்கி அதில் பச்சைமிளகாய் மற்றும் அரைத்துவைத்துள்ள தக்காளி விழுது சேர்த்து நன்கு பச்சை வாடை போகும்வரை வதக்கவும். அதன்பின் அதில் நாம் செய்து வைத்த பணியார துண்டுகளை அதில் சேர்த்து கிளறி கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான ரவை அப்பம் மசாலா தயார்.