ஞான பூமியான இந்தியாவில் சர்வாதிகார ஆட்சி புரிந்து மக்களை வதைத்த வெள்ளையர்களை விரட்டி வெற்றி அடைந்த தினம் தான் சுதந்திரதினம்.
அடிமை படுத்தப்பட்ட மக்கள்:
200 ஆண்டுகளுக்கு முன் இந்தியா சொர்க்க பூமியாகவும், செல்வபூமியாகவும் இருந்தது. ஆனால், இங்கு இருந்த ஆட்சியர்களுக்கு அதன் மதிப்பு தெரியவில்லை என்று தான் சொல்லவேண்டும். அவர்களுக்குள் ஒற்றுமை இல்லாது இருந்ததது.
இந்த தேசத்தின் வனப்பையும் அதன் அழகையும் பார்த்து பேராசை கொண்ட நாடுகள் ஏராளம். அப்படி ஆசைப்பட்டவர்களில் ஒரு நாடு தான், இங்கிலாந்து. நம்மிடம் இருக்கும் வளங்களை பார்த்து பிரமித்து போன அவர்கள், அதனை சூறையாட திட்டம் தீட்டினர்.
அரசு பணியிடங்களில் 50% தான் நிரப்பப்படும் – TNPSC அறிவிப்பால் தேர்வர்கள் அதிர்ச்சி!!
அப்படி நம்மை அடிமைபடுத்த “ஈஸ்ட் இந்தியா கம்பெனி” என்று பசு தோல் போர்த்திய ஓநாய் ஆக உள்நுழைந்து இங்கு ஆட்சி புரிந்த மன்னர்களை மயக்கி பேராசை காட்டி நமது நாட்டை கைப்பற்றி ஆட்சி புரிந்தனர்.
துன்பம் மட்டுமே அப்போது:
அப்படி அவர்கள் ஆட்சியை கைப்பற்றி முதலில் மன்னர்களை கொன்று தீர்த்தனர். பின், மக்களை சொல்லமுடியாத பல துன்பங்களுக்கு உள்ளாகினர்.
மக்கள் தலைமை இல்லாமல் திண்டாடினார். அப்போது, தான் காந்திஜி, நேரு, வல்லபாய் படேல், ஜின்னா உள்ளிட்ட பல தலைவர்கள் மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி வெள்ளையர்களுக்கு எதிராக போராடினர்.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
இந்த நாட்டு மக்களின் சிறப்பே அவர்களின் பொறுமை தான். அவர்கள் அகிம்சை முறையை பின்பற்றி போராடியதால் தான் நாம் இன்று இந்த சுதந்திரமான வாழ்க்கையை வாழ்கிறோம். நள்ளிரவு நாமாக சுதந்திரம் அதிகாரப்பூர்வமாக அளிக்கப்பட்டது.
சுதந்திரதின கொண்டாட்டங்கள்:
இந்த ஆண்டு நாம் 74 வது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கிறோம். இந்த ஆண்டு கொரோனா நோய் பரவலால் மாணவர்கள் மற்றும் மக்கள் யாரும் பொது இடத்தில் கூட வேண்டாம் என்று அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த கொண்டாட்டத்தின் பொது அனைத்து படை வீரர்களும் தங்கள் திறமைகளை காட்டுவர். இந்த தினம் தேசத்திற்காக போராடிய நமது சுதந்திர வீரர்களை நினைவு கூறும் வகையிலும் அமையும்.
இந்த தினத்தில் பிரதமர் நாட்டின் நலன், வருங்கால திட்டங்கள், கடத்த காலத்தில் நாம் சாதித்தது என்று அணியத்தையும் ஒரு தொகுப்பாக உரை ஒன்றை நிகழ்த்துவார். அனைவரும் தேசிய கீதத்தை ஒன்றாக பாடுவர் இந்த கொண்டாட்டத்தின் போது.