மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை – பொதுமக்கள் ஷாக்!!

0
Gold
Gold

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தது. இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்த நிலையில் இன்று மீண்டும் விலை உயர்ந்து உள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 41 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

இன்றைய விலை:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பை போன்று மக்களை அதிர்ச்சி அடைய வைத்த முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று தங்கத்தின் விலை ஏற்றம். ஆம், ஊரடங்கு காலத்தில் அந்த அளவிற்கு வரலாறு காணாத அளவு தங்கத்தின் விலை உயர்ந்தது. இதுவரை இல்லாத அளவு ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 43 ஆயிரத்தை தாண்டியது. கொரோனாவால் பல தொழில் துறைகள் நஷ்டம் அடைந்த காரணத்தால் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்தது. மேலும் இந்திய ரூபாய்க்கு நிகரான அந்நிய செலாவணி மதிப்பு உள்ளிட்ட காரணங்களால் விலை கிடுகிடுவென அதிகரித்துக் கொண்டே சென்றது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் இணைய கிளிக் பண்ணுங்க!!

Gold Jewels
Gold Jewels

அரசு பணியிடங்களில் 50% தான் நிரப்பப்படும் – TNPSC அறிவிப்பால் தேர்வர்கள் அதிர்ச்சி!!

கடந்த சனிக்கிழமை முதல் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தது. இந்நிலையில் இன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் (22 காரட்) விலை 35 ரூபாய் அதிகரித்து ரூ. 5,111 க்கும், ஒரு சவரன் 280 ரூபாய் உயர்ந்து ரூ.40,888 க்கும் விற்பனை ஆகிறது. வெள்ளியின் விலை ஒரு கிராம் 76.70 ரூபாயாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here