கடந்த சில மாதங்களுக்கு முன் பல சீன ஆஃப்களை தடை செய்த இந்தியா அரசு தற்போது அடுத்த கட்டமாக இந்தியர்கள் அதிகமாக பயன்படுத்தும் பைடு தேடல் மற்றும் வெய்போவை தடை செய்ய அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
லடாக் பிரச்சனை:
கடந்த சில நாடுகளாக நடந்து வந்த லடாக் எல்லை பிரச்சனையால் இந்தியா மற்றும் சீனா இடையே பெரிய பனிப்போர் நடந்து வருகிறது அதில் இந்தியா அரசால் அதிரடியாக எடுக்கபட்ட முடிவு தான் சீன ஆஃப்களை தடை செய்வது.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
அதனை கடந்த ஜூன் மாதம் 29 ஆம் தேதி யாரும் எதிர்பார்க்கா வண்ணம் இந்தியர்கள் அனைவரும் அதிகமாக பயன்படுத்தும் டிக்டோக், யுசி பிரௌசர் போன்ற ஆஃப்களை பிலே ஸ்டார் இல் இருந்து நீக்க உத்தரவிடப்பட்டது. முதற்கட்டமாக, 47 முக்கிய ஆஃப்களை தடை செய்தது.
சீனா ஆஃப்களுக்கான தடை:
இது பலர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், பலரும் இதனை வரவேற்றனர். இந்த தடை உத்தரவை பிறப்பித்த மத்திய அரசு அடுத்த கட்டமாகவும் பல ஆஃப்களை நீக்க உத்தரவு வரும் என்று கூறியது.
இதன் தொடர்ச்சியாக, அடுத்த கட்டமாக டிக்டோக் லைட், லைக் லைட், பிகோ லைவ் லைட், ஷேரிட் லைட் மற்றும் கேம்ஸ்கேனர் எச்டி போன்றவற்றையும் அடுத்த கட்டமாக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தற்போது தடை:
இதனால், தற்போது இந்தியாவில் 275 சீனா ஆஃப்கள் தடை செய்யப்பட்டு இருந்தது. இதன் தொடர்ச்சியாக தற்போது, இந்தியர்கள் கூகிள் மற்றும் ட்விட்டர்க்கு அடுத்ததாக அதிகமாக பயன்படுத்தும், பைடு தேடல் மற்றும் வெய்போ தடை உத்தரவை பிறப்பித்துள்ளது மத்திய அரசு.
அயோத்தி ராமர் கோவில் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு!!
இது சீனாவின் சிறந்த பயன்பாடுகள் ஆகும். வெய்போ ஒரு சிறந்த சீனா செயலி ஆகும். இது தற்போது உலகளவில் 500 கோடி நபர்களை பயனாளராக கொண்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியை தனது ஸ்டார் பயனாளர் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த வெய்போவில் பிரதமர் மோடி இணையும் போது பிரதமர் மோடி குரிப்பிட்டது “ஹலோ சீனா! வெய்போ மூலம் சீன நண்பர்களுடன் தொடர்புகொள்வதை எதிர்பார்க்கிறேன் ”
என்று குறிப்பிட்டிருந்தார்.
பைடு தேடல்:
இந்த ஆண்டு ஜனவரி மாதம் பைடு வின் தலைவர் லி மெட்ராஸ் ஐஐடி இல் பேசும் பொது இந்தியாவுடன் உறவு வைத்து உள்ள விரும்புகிறோம் என்றும், தொழில்நுட்ப துறைகளில் வேலை பர்கா அவளாக இருப்பதாகவும், குறிப்பாக செயற்கை நுண்ணறிவு மற்றும் மொபைல் கணினி போன்ற பகுதிகளில் என்று தெரிவித்து இருந்தார்.
இந்த தடை உத்தரவால் சீனா மற்றும் நமக்கு இன்னும் பதற்றம் அதிகரிக்க வாய்ப்புக்கள் உள்ளது.