விஜய் டிவியின் ‘தெய்வம் தந்த வீடு” சீரியலில் சரண் என்ற கேரக்டரில் நடித்திருந்தவர் தன நடிகர் அசீம். இதை தொடர்ந்து இவர் பகல் நிலவு, கடை குட்டி சிங்கம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வந்த இவர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்துள்ளார். இதன் பிறகு சின்னத்திரையில் சிறிது கேப் எடுத்துக் கொண்ட இவர் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளர் கலந்து கொண்டார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதில் இவருடன் கலந்து கொண்ட சக போட்டியாளர்களுடன் இவருக்கு அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. இதனால் இவர் மீது ரசிகர்களுக்கு இருந்த நம்பிக்கை குறைய தொடங்கியது. ஆனால் இறுதி வரை தனது திறமையை வெளிப்படுத்தி வந்த இவர் பிக் பாஸ் சீசன் 6 ன் டைட்டிலை தட்டி சென்றார். மேலும் இதன் தலைப்பை அசீமுக்கு கொடுத்ததற்காக அந்த சேனலை சில விமர்சித்து வந்தனர்.
பொன்னியின் செல்வனில் குந்தவையாக நடித்தது இந்த நடிகையின் மகளா? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!
இந்த நிலையில் பிரபல youtuber ஜோ. மைக்கேல் big boss டைட்டிலை ‘அசீம்’ வென்றதில் முறைகேடு இருப்பதாக கூறி, இந்திய ஒலிபரப்பு அறக்கட்டளையிடம் தகவல் கேட்டு மனு அளித்துள்ளார். இதனால் அசீம் மற்றும் அவரது நண்பர்கள் சிங்காரவேலன், தேவராஜ் உள்ளிட்டோர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொடுத்த மனுவை திரும்ப பெரும் படி இவரை மிரட்டியுள்ளனர். மேலும் தனக்கு கொலை மிரட்டல் விடுபவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி சென்னை காவல் ஆணையரிடம் மைக்கேல் புகார் அளித்துள்ளார்.