கணவர் கல்லூரி மாணவி ஒருவருடன் தகாத உறவில் ஈடுபட்டு இருந்ததை அறிந்து மனம் உடைத்து போன மனைவி தனது இரு குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தகாத உறவு:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள வல்லபகாடு கிராமத்தை சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி ராதா. இவர்களுக்கு அபிஷேக், அபிரூத் என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர். முத்துவிற்கு 22 வயதான கல்லூரி மாணவி விஜயலட்சுமி என்பவருடன் தகாத உறவு இருந்துள்ளது. இதனை அறிந்த அவரது மனைவி ராதா பல முறை கண்டித்துள்ளார். ஆனால், அவரை முத்து ஒரு பொருட்டாகவே கருதவில்லை.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
இதனால் குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் இருந்துள்ளது. அதே போல் கணவன் மனைவி இருவருக்கு அடிக்கடி சண்டை நடந்துள்ளது. இப்படியாக இருக்க நேற்று முன் தினம் முத்து, விஜயலட்சுமியுடன் தலைமறைவாகி உள்ளார். இதனை அறிந்த அவரது மனைவி ராதா மிகவும் நொந்து போன நிலையில் அக்கம்பக்கத்தில் இருந்துள்ளவர்களும் கேவலமாக பேசி உள்ளனர்.
கணவனின் நடத்தையால் மன உளைச்சல்:
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான ராதா தனது இரு மகன்களுடன் படுக்கை அறையை சாத்தி விட்டு அவர்கள் இருவர் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி விட்டு தன் மீதும் ஊற்றிக் கொண்டு தீக்குளித்து தற்கொலை கொண்டுள்ளார். இவர்களது அலறல் சத்தத்தை கேட்டு அருகில் குடி இருந்த இவர்களது உறவினர்களான ஆனந்தி மற்றும் சத்யமூர்த்தி மூவரையும் காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால், அதற்கு முன்பாகவே ராதா மற்றும் அவரது இளைய மகன் அபிஷேக் உயிரிழந்துள்ளனர். மூத்த மகன் அபிரூத் உயிருக்கு போராடியுள்ளான். அவனை விரைவாக அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
கிரிக்கெட்டில் ரீஎன்ட்ரி கொடுக்கும் யுவராஜ் சிங்!!
அவனுக்கு உடனடியாக அவசர சிகிச்சையும், முதலுதவியும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அவனும் சிகிச்சை பலனின்றி பரிதமாக உயிரிழந்தான். இவர்களை காப்பாற்ற போன ஆனந்தி மற்றும் சத்யமூர்த்தி இருவரும் தற்போது தீக்காயங்களுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மூவரின் தற்கொலைக்கு காரணமான முத்துவை போலீசார் தேடி வருகின்றனர். அவர் மீது வழக்குப் பதிவும் செய்துள்ளனர். ஒரு குடும்ப தலைவர் சரி இல்லாத காரணத்தால் ஒரு குடும்பமே சிதைந்துள்ளது மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.