மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பெண் தனது 16வது குழந்தையை பெற்றுடுக்கும் போது மரணம் அடைந்துள்ளார். அவரது பிறந்த குழந்தையும் உயிரிழந்தது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
16 வது பிரசவம்:
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தமோ என்ற மாவட்டத்தின் பாதகிர் கிராமத்தை சேர்ந்தவர், சுக்ரானி. இவருக்கு தற்போது 45 வயது ஆகிறது. இவர் 16வது முறையாக கர்ப்பம் அடைந்துள்ளார். நேற்று முன் தினம் பிரசவ வலி எடுக்கவே அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பிரசவம் நடக்கும் போதே ஒரு வித சோர்வுடன் தான் இருந்துள்ளார்.
உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!
இந்நிலையில், அவருக்கு அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. பிறந்த தனது ஆண் குழந்தையுடன் சிறிது நேரத்திலேயே அவர் தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். ஆனால், சிறிது நேரத்திலேயே தாய் மற்றும் பிறந்த ஆண் குழந்தை மரணம் அடைந்துள்ளனர்.
உடல்சோர்வு தான் காரணம்:
சுக்ரானிக்கு 16வது பிரசவம் பார்த்த பெண் செவிலியரான கல்லோ பாய் விஸ்வகர்மா கூறியதாவது “அந்த பெண் மிகுந்த சோர்வுடன் காணப்பட்டார். அவரது மோசமான உடல்நிலை தான் அவரது மரணத்திற்கு காரணம். அந்த பெண் ஏற்கனவே 15 குழந்தைகளை பெற்றுடுத்து விட்டு தற்போது மரணம் அடைந்துள்ளார்” இவ்வாறாக தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரம் பண்டிகை முன்பணம் – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!!
இவருக்கு ஏற்கனவே 15 குழந்தைகள் பிறந்துள்ளன. அதில் தற்போது 8 குழந்தைகள் மட்டுமே உயிருடன் உள்ளனர். மற்ற குழந்தைகளை அனைத்தும் பிறந்த சில மணி நேரங்களிலோ, சில வாரங்களிலோ அல்லது சில மாதங்களிலோ மரணம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.