தற்போதைய தலைமுறையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஸ்மார்ட் போன் இல்லாத ஆளே இல்லை. மேலும் தற்போது வாட்ஸ் ஆப் மூலம் பணம் அனுப்பும் வசதி அதிமுகமாவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாட்ஸ் ஆப்
வாட்ஸ் ஆப் அனைவரும் சுலபமாக பயன்படுத்தும் வகையில் உள்ளதால் அனைவரும் பயன்படுத்தும் ஒரு செயலி ஆகும். இதன் மூலம் போட்டோ, வீடியோ என அனைத்தையும் ஈஸியாக பகிர முடியும். மேலும் வாட்ஸ் ஆப்பை பேஸ் புக் நிறுவனம் வாங்கிய பிறகு பல மாற்றங்களை செய்துள்ளது.
இதனை தொடர்ந்து தற்போது வாட்ஸ் ஆப் செயலி பணம் பரிமாற்றத்தை அறிமுகம் செய்துள்ளது. மேலும் இதனை பிரேசிலில் மட்டுமே அறிமுகம் செய்துள்ளது. இது வரை கூகுளேபே, போன்பே மூலம் பண பரிமாற்றம் செய்து வந்த நிலையில் தற்போது வாட்ஸ் ஆப் மூலம் பண பரிமாற்றம் செய்யும் முறை அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரேசில்
பிரேசிலில் அதிகரா பூர்வமாக வாட்ஸ் ஆப் மூலம் பணம் அனுப்பும் முறை அறிமுகப்படுத்தியுள்ளது. வாட்ஸ் ஆப் இல் வாங்கி கணக்கை சேர்த்து பணம் பரிமாற்றம் செய்வதாக உள்ளது. மேலும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு 6 இலக்க பாஸ்வேர்ட் மற்றும் கைரேகை போன்றவற்றை இந்த பண பரிமாற்றத்தில் அறிமுகபடுத்தியுள்ளது.