அடுத்த நான்கு நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் – வானிலை மையம் தகவல்!!

0

இன்று முதல் அடுத்து வரும் நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் வானிலை வறண்டு காணப்படும் என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தொடர்ந்து வரப்போகும் நாட்களில் வெப்பநிலை சற்று உயரக்கூடும் எனவும் தகவல்கள் பெறப்பட்டுள்ளது.

வறண்ட வானிலை

தமிழகத்தில் அடுத்து வரும் நான்கு நாட்களுக்கு அதாவது இன்று முதல் வெள்ளிக்கிழமை (05-03-2021) வரை தமிழகத்தில் வறண்ட வானிலை காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மட்டுமல்லாது புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வறண்ட வானிலேயே நிலவும். தொடர்ந்து மார்ச் 6ம் தேதி தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் எனவும் மற்ற மாவட்டங்களில் வறட்சியான வானிலை காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கடைசி நிமிடத்தில் கண்ணம்மாவை ஜெயிக்கவிடாமல் தடுக்கும் வெண்பா – சௌந்தர்யா எடுக்கும் அதிரடி முடிவு!!

அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்ஸியஸ் அதிகமாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரதிற்கு வானம் தெளிவாக காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்ஸியஸை ஒட்டி இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மழை அளவு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. மீனவர்களுக்கான எச்சரிப்புகளும் கொடுக்கப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here