அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைப்பதிவாளர் பார்த்தசாரதி என்பவர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். பல்கலைக்கழகத்தில் வேலைவாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.
பல்கலைக்கழக துணைப்பதிவாளர் கைது
அண்ணா பல்கலைக்கழத்தின் துணை வேந்தர் சூரப்பா மீதான மோசடி வழக்கு நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது. இதைத்தொடர்ந்து மீண்டுமாக அண்ணா பல்கலைக்கழகம் மற்றுமொரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பல்கலைக்கழக துணைப்பதிவாளர் ஒருவர் மோசடியில் ஈடுபட்டுள்ளார். அண்ணா பல்கலைக்கழக துணைப்பதிவாளர் பார்த்தசாரதி என்பவர் பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 3.28 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அடுத்த நான்கு நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் – வானிலை மையம் தகவல்!!
இது மட்டுமல்லாது, விக்னேஸ்வரன் என்பவர் உள்ளிட்ட 25 பேருக்கு போலியான பணி நியமன ஆணைகளையும் அவர் வழங்கியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மோசடி வழக்கு தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், பல்கலைக்கழகத்தில் வேலைவாங்கி தருவதாக கூறி 25 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட பல்கலைக்கழக துணைப்பதிவாளர் பார்த்தசாரதி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.