தன் முதல் பிரேக்கப் பற்றி மனம் திறக்கும் சமந்தா – வைரலாகும் இன்ஸ்டா பதிவு!!

0

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா அக்கினேனி. தொடர்ந்து தன் புகைப்படங்களை வலைத்தளங்களில் வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருபவர். இந்நிலையில் தற்போது தனது முதல் காதல் பிரேக்கப் ஆனதை பற்றி தனது இன்ஸ்டா பக்கத்தில் குறிப்பிட்டு போஸ்ட் செய்துள்ளார்.

சமந்தா அக்கினேனி

தமிழில் மாஸ்கோவில் காவேரி படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தெலுங்கிலும் தொடர்ந்து பல படங்களில் நடித்திருந்தார். தமிழில் முன்னணி நடிகையாக இருந்தாலும் அவர் அறிமுகமானது தெலுங்கில் தான். இதோடு அவர் திரையுலகிற்கு நடிக்க வந்து 11 வருடங்கள் ஆகிறது. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் அதில் தனது காதல் கிடைத்ததும் 11 வருடங்கள் ஆகிறது என்றும் கண்கலங்கி இருந்தார். இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள போஸ்ட் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது பல்லாவரத்தில் ஒரு இடத்தை குறிப்பிட்டு அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் தன் முதல் காதல் பிரேக்கப் ஆன இடமும் இதுதான் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே நடிகர் சித்தார்த்துடன் சமந்தா சுற்றி திரிந்தது அனைவர்க்கும் தெரிந்த ஒன்று. ஐவரும் காதலித்து வந்ததாகவும், லிவ்விங் ரிலேஷனில் இருந்ததாகவும் சொல்லப்பட்டது.

இந்நிலையில் தான் அவர் நாகசைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னை வந்திருக்கும் சமந்தா அந்த இடத்தை பார்த்ததும் தான் நினைவுகளை பகிர்ந்துள்ளார். இதனை பலரும் பலவாறு பேசி வருகின்றனர். மேலும் பலரும் சித்தார்த்தை குறிப்பிட்டு தான் இப்படி சொல்கிறீர்களா?? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here