வீட்டின் நிலை புரியாமல் இஷ்டத்திற்கு செலவு செய்யும் மீனா – கவலையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பம்!!

0

ஷாப்பிங் செய்வதின் மூலம் முல்லைக்கும் மீனாவுக்கும் இடையே மோதல் உருவாகிறது. பின்பு குடும்ப பிரச்சனைகளை குறித்து மூர்த்தியிடம் கூறி வருத்தப்படுகிறார் தனம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்

இன்றைய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் கடைக்கு ஷாப்பிங் செல்லும் மீனா மற்றும் முல்லைக்கு இடையே பிரச்சனைகள் எழுந்துள்ளது. ஷாப்பிங் முடித்து வீட்டுக்கு வரும் மீனா, தனத்திடம் முல்லையை பற்றி குறை கூறுகிறார். ரெண்டு பேரும் சின்ன பிள்ளைங்க மாதிரி அடிச்சுக்கிறீங்க, உங்களுக்கு அறிவே இல்லையா என இருவரிடமும் கோபப்படுகிறார் தனம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஷாப்பிங் செய்த பில்லை தனத்திடம் முல்லை கொடுக்க  ரூ.4900 எப்படி வந்தது, மீதி பணத்துக்கு என்ன செஞ்சீங்க என தனம் கேட்க, நான் தான் என் பணத்தை கொடுத்தேன் என மீனா கூறுகிறார். எனக்கு பொருள் வாங்கினா நான் தானே பணத்தை கொடுக்கணும் என்று கூறி, பாப்பா அழ அவளை தூக்கி கொண்டு உள்ளே போகிறார் மீனா.

சரவணன் சந்தியாவை பிரிக்க திட்டமிடும் சிவகாமி – விறுவிறுப்பான கதைக்களத்துடன் ராஜா ராணி 2!!

தேவையில்லாமல் எதுக்காக இவ்வளவு செலவு செய்தாள் மீனா என வருத்தப்படுகிறார் தனம். வீட்டு தேவைகளுக்கு பணம் போதவில்லை என மூர்த்தியிடம் கூறுகிறார் தனம். அப்போது அங்கு வரும் கதிரிடம் டிபார்ட்மென்டல் ஸ்டார் கட்டுவதற்கு தேவையான ஏற்பாடுகளை குறித்து பேசுக்கொண்டிருக்கிறார்கள் மூர்த்தி மற்றும் தனம். பேங்கில் லோன் வாங்கலாமா என ஆலோசனை சொல்லுகிறார் மூர்த்தி.

பின்பு வீட்டை வைத்து லோன் வாங்கலாம் என கதிர் ஆலோசனை சொல்லும் போது, இது நல்ல யோசனை என தனமும் ஆமோதிக்கிறார். இந்த முடிவை ஏற்றுக்கொள்ளும் மூர்த்தி, கடன் குறித்து பேங்கில் கேட்டுப்பார்க்கலாம் என கூறுகிறார். காலையில் விடிந்ததும் மருத்துவமனைக்கு செக்கப்புக்காக செல்கிறார் தனம் மற்றும் மூர்த்தி. மருத்துவமனைக்கு செல்லும் முன்பு, மூர்த்தி லோன் வாங்கும் விஷயத்தை தன் அம்மாவிடம் கூறும் போது, அதிர்ச்சியாகிறார் லட்சுமி. இத்துடன் இன்றைய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here