சரவணன் சந்தியாவை பிரிக்க திட்டமிடும் சிவகாமி – விறுவிறுப்பான கதைக்களத்துடன் ராஜா ராணி 2!!

0

சந்தியாவை ஏற்றுக்கொண்டதாக கூறிய சிவகாமி, சந்தியா மற்றும் சரவணனை நிரந்தரமாக பிரிக்க திட்டமிடுகிறார். சிவகாமியின் சதியால் பெரும் கஷ்டத்துக்கு உள்ளாகியிருக்கிறார் சந்தியா.

‘ராஜா ராணி 2’

இன்றைய ‘ராஜா ராணி’ 2 சீரியலில் சரவணன் மற்றும் சந்தியாவை ஏற்றுக்கொண்டதற்காக, சரவணனின் அப்பா சிவகாமிக்கு நன்றி கூறுகிறார். சந்தியாவைப் பற்றி சரவணனின் அப்பாவிடம் குறைகூறுகிறார் சிவகாமி.

சந்தியா படித்தவளாக இருந்தாலும், சரவணன் இனிப்புக்கடை வைத்திருப்பவன் என்ற எண்ணம் சந்தியாவுக்கு இருக்கத்தான் செய்யும், சந்தியா இந்த குடும்பத்துக்கு ஏற்றவள் இல்லை என்பதை, ஒவ்வொரு நாளும் அவளது நடத்தையை வைத்து சரவணனுக்கு புரிய வைப்பேன் என சிவகாமி தெளிவாக கூறுகிறார்.

அடுத்த நாள் பொழுது விடிந்ததும், சீக்கிரமாக குளித்து முடித்து விட்டு துளசி செடிக்கு தண்ணீர் ஊறிக்கொண்டிருக்கிறார் சந்தியா. அங்கு வரும் சரவணன், சந்தியாவின் அண்ணன் அவரிடம் போன் செய்து பேசியதாகவும், சந்தியாவை அவள் அண்ணனிடம் பேச சொல்லி வற்புறுத்துகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதற்கு என்னால் அவனிடம் பேசமுடியாது என கோபமாக பதில் கூறுகிறார் சந்தியா. அண்ணனிடம் போன் செய்து பேசினால் எனக்கு ரத்த கொதிப்பே ஏற்படும், அதனால் மூன்று மாதம் முடிந்ததும் நான் அவனுடன் பேசிக்கொள்கிறேன் என சந்தியா கூறுகிறார்.

பின்பு வீட்டு வேலைகளை கவனிக்க செல்லும் சந்தியாவுக்கு ஆல் த பெஸ்ட் கூறுகிறார் சரவணன். காலை சமையலுக்கு இட்லி செய்யலாம் என முடிவெடுக்கும் சந்தியாவிடம், அம்மி கல்லில் சட்னி அரைக்க சொல்லி சந்தியாவை நிர்பந்திக்கிறார் சிவகாமி. அம்மியில் அரைக்கும் போது சட்னி சிந்துவதால் சந்தியாவை திட்டுகிறார் சிவகாமி.

தடாலடியாக குறைந்த தங்கத்தின் விலை – மகிழ்ச்சியில் மக்கள்!!

பின்பு சமைத்ததை பறிமாறும் போது, சந்தியா செய்த சட்னியை வாயில் வைத்தவுடன் முழு குடும்பமும் முகம் சுளிக்கிறது. சட்னி எப்படி இருக்கிறது என சரவணனிடம் சிவகாமி கேட்கும் போது, நன்றாகயில்லை என கூறுகிறார் சரவணன்.  சட்னி சந்தியா செய்தது என சிவகாமி கூறும் போது, இட்லியுடன் சேர்த்து சாப்பிட நன்றாக தான் இருக்கிறது என மழுப்புகிறார் சரவணன். இத்துடன் இன்றைய தொடர் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here