பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி குறைப்பு – மத்திய நிதி அமைச்சகம் பரிசீலனை!!

0

இந்தியாவில் தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையால் நாடு முழுவதும் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். பெட்ரோல் மீதான கலால் வரியை குறைக்க மத்திய அமைச்சகம் பரிசீலீத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பெட்ரோல் டீசல் வரி குறைப்பு

கொரோனா காலத்தில் இந்தியாவின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்து வந்தது. இழந்த பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முன்னதாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்த போது, அந்த விலையை பயனாளர்களுக்கு அளிப்பதற்கு மாறாக, மத்திய அரசு கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 2 முறை பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகளை உயர்த்தியது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது உலக சந்தையில் கச்சா எண்ணெய்களின் விலை உயர்வை எட்டியுள்ளதை தொடர்ந்து, இந்தியாவிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றத்தை சந்தித்து வருகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாய்க்கு விற்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையேற்றத்தால் அத்தியாவசிய பொருள்களின் விலையும் உயர்ந்துள்ளது.

தேர்தலில் தொகுதி பங்கீடுகளை இறுதி செய்ய தீவிரம் – முதல்வர், துணை முதல்வர் ஆலோசனை!!

இந்நிலையில் நுகர்வோர் மீதான வரிச்சுமையை, சற்று குறைக்கும் நோக்கில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான, கலால் வரியை குறைப்பதற்கு நிதியமைச்சகம் முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம், மாநில அரசுகள், பெட்ரோலிய அமைச்சகம் மற்றும் பெட்ரோலிய நிறுவனங்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. இந்த ஆலோசனைக்கு பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி குறைப்பு குறித்த தகவலை மத்திய அமைச்சகம் வெளியிட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here