தமிழகத்தில் இன்று முதல் வரும் 10 ம் தேதி வரை வறண்ட வானிலை காணப்படும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தொடர்ந்து காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
வறண்ட வானிலை
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 10 ம் தேதி வரை வறண்ட வானிலை காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தொடர்ந்து வரவுள்ள இரண்டு நாட்களுக்கு வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் தகவல்கள் பெறப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், காலை நேரங்களில் லேசான பனிமூட்டத்துடனும் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏடிஎம் இயந்திரம் கயிறு கட்டி இழுத்து கொள்ளை – திரைப்பட பாணியில் அதிர்ச்சி சம்பவம்!!
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்ஸியஸை ஒட்டி இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மழை எதுவும் பதிவாகவில்லை. மேலும் பிப்ரவரி 7 முதல் 9 தேதிகளில் மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளை ஒட்டி வடகிழக்கு பகுதிகளிலிருந்து பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.