தற்போது வரும் 18ம் தேதியன்று இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நடைபெற உள்ளது. அந்த ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அர்ஜுன் டெண்டுல்கரை ஏலத்தில் எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல்:
தற்போது இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் மாதம் முதல் தொடங்கவுள்ளது. இதனை முன்னிட்டு வரும் 18ம் தேதி அன்று மினி ஏலம் நடக்கவுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தங்களது அணியில் இருந்து மொத்தமாக 57 வீரர்களை விடுவித்துள்ளனர். அதேபோல் ஐபிஎல் மினி ஏலத்தில் 1097 வீரர்கள் ஏலத்திற்காக தங்களது பெயரை பதிந்துள்ளனர். தற்போது அனைவரின் கவனமும் மினி ஏலத்தை நோக்கி தான் உள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என்று அழைக்கப்படுபவர் தான் சச்சின் டெண்டுல்கர். இவரது மகன் அர்ஜுன் டெண்டுல்கர் இவரும் ஓர் கிரிக்கெட் வீரர் தான். இவர் கடந்த சில ஆண்டுகளாகவே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வலை பயிற்சி பந்து வீச்சாளாராக திகழ்ந்து வருகிறார். கடந்த ஆண்டில் கூட மும்பை அணியுடன் இவர் ஐக்கிய அரபிற்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஆண்டு நடந்த சையது முஷ்டாக் அலி கோப்பையில் இவர் பங்கேற்றார்.
ஏடிஎம் இயந்திரம் கயிறு கட்டி இழுத்து கொள்ளை – திரைப்பட பாணியில் அதிர்ச்சி சம்பவம்!!
ஆனால் அதில் இவரது செயல்பாடு பெரிய அளவில் பேசும் அளவிற்கு இல்லை. இவர் வீசிய 7 ஓவர்களில் 67 ரன்களை வழங்கியுள்ளார். தற்போது இந்த ஆண்டு நடைபெறவுள்ள மினி ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி இவரை அடிப்படை தொகையான ரூ.20 லட்சத்திற்கு இவரை தேர்வு செய்யவுள்ளது என்று ஓர் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் குஷி அடைந்துள்ளனர்.