அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் – சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

0

தமிழகம், காரைக்கால் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் அடுத்த ஐந்து நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

வறண்ட வானிலை

தற்போது வெளி வந்த சென்னை வானிலை மையத்தின் பகல் நேர அறிவிப்பின் படி தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது. தொடர்ந்து சென்னை மட்டும் புறநகர் பகுதிகளில் வானம் லேசான மேகமூட்டத்துடனும், காலை நேரங்களில் லேசான பனிமூட்டத்துடனும் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

‘உலகில் அதிக அளவு மக்களை மார்பக புற்றுநோய் பாதித்துள்ளது’ – உலக சுகாதார அமைப்பு தகவல்!!

சென்னையின் அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்ஸியஸ் ஆகவும் காணப்படும். தொடர்ந்து பிப்ரவரி 3 மட்டும் 4 தேதிகளில் மன்னார் வளைகுடா மட்டும் கன்னியாகுமரி கடல் பகுதிகளை ஒட்டி வட கிழக்கு திசையில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதாலும் இன்று தென் மேற்கு வங்ககடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதாலும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here