வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு – அமைச்சர்கள் குழுவுடன் பாமக பேச்சுவார்த்தை!!

0

வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு குறித்து தமிழக அமைச்சர்கள் குழுவுடன் பாமக பேச்சு வார்தை நடத்தியுள்ளது. மேலும் கூட்டணி கட்சிகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

பாமக:

தற்போது தமிழகத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தங்களது பிரச்சார பணிகள், கூட்டணி கட்சிகள் குறித்த முடிவுகள் போன்ற தேர்தல் வேளைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தமிழகத்தில் தேர்தல் நடைபெற இருப்பதால் இதனை முன்னிட்டு மோடி மற்றும் ராகுல் இருவரும் ஒரே நாளில் தமிழகத்திற்கு வருகை தரவுள்ளனர். இதனால் தமிழகத்தில் அரசியல் சூழல் பரபரப்பாக இருந்து வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் தற்போது பசுமையை சாலையில் அமைந்திருக்கும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி இல்லத்தில் தமிழக அமைச்சர்கள் குழு கூடியது. அதில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முக மற்றும் பாமக சார்பில் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி மற்றும் வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோர் இந்த பேச்சுவார்தையில் கலந்துள்ளனர். அதில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடாக 20 சதவீதி இடம் ஒதுக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் – சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

மேலும் கூட்டணி முடிவுகள் பற்றியும் பேசியுள்ளனர். வரும் 14ம் தேதி பிரதமர் தமிழகத்திற்கு வருகை தரவுள்ளார். இந்நிலையில் அதிமுக கூட்டணியில் பாமகவை இணைக்க திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. இதற்கு முன்பாகவே தைலாபுரத்தில் உள்ள தோட்ட இல்லத்தில் அமைச்சர்கள் பாமக உடன் கூட்டணி குறித்து பேசி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here