தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலான இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் பெருகி, அணைகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
வானிலை அறிக்கை:
கடந்த அக்டோபர் 25ம் தேதி முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் உள் மாவட்டங்கள் குறிப்பாக சென்னை, மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. விடிய விடிய பெய்த கனமழையால் சாலைகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதனால் கொரோனா வைரஸ் உள்ளிட்ட நோய்கள் பரவ அதிக வாய்ப்புகள் உள்ளது என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அரசு முயற்சித்து வருகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தேனி மற்றும் நீலகிரி மாவட்டங்களின் மலைத்தொடர்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்கள் மற்றும் கேரளாவின் ஒருசில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
அதுமட்டுமின்றி திருவள்ளூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம் உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு உள்ளது.