சென்னையில் இம்மாத தொடக்கத்தில் இருந்தே குறைந்து கொண்டே வந்த தங்கத்தின் விலை, கடந்த 2 நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் 39 ஆயிரம் ரூபாயை தாண்டி உச்சத்திற்கு சென்றுள்ளது.
இன்றைய விலை:
கொரோனா பாதிப்பு காரணமாக தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதால் பங்குச்சந்தையில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மீது அதிகளவு முதலீடு செய்தனர். விளைவு தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து கொண்டே சென்றது. கடந்த ஆகஸ்ட் மாத மத்தியில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 43 ஆயிரம் ரூபாயை தாண்டியது. நகை வரலாற்றிலேயே அதிகபட்ச விலை இதுவாகும். இதனால் ஊரடங்கு காலத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டு இருந்த மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
தற்போது ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டு தொழில் துறைகள் செயல்பட தொடங்கி உள்ளதால், வர்த்தகம் சிறிது சிறிதாக பழைய நிலைக்கு திரும்பி வருகிறது. இதனால் இம்மாத தொடக்கத்தில் இருந்தே தங்க நகை விலை சற்று குறைந்து கொண்டே வந்தது. தற்போது தீபாவளி போன்ற பண்டிகை காலம் வேறு நெருங்கி வருவதால் நகை வியாபாரம் சற்று சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இதற்கிடையில் கடந்த 2 நாட்களாக தங்க விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 காரட்) ரூ.17 உயர்ந்து 4,884 ரூபாயாகவும், ஒரு சவரன் 136 ரூபாய் அதிகரித்து ரூ. 39,072க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வரும் நாட்களிலும் தங்க விலை உயர அதிக வாய்ப்புகள் உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளது வேதனை அளிப்பதாக உள்ளது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.