மதுரையின் முன்னாள்அ.தி.மு.க எம்.எல்.ஏ தனது மகளுக்கு 2 கோடி மதிப்பில் சீர்வரிசை கொடுத்துள்ளார். இது மதுரை நகரையே வாய்ப்பிளக்க வைத்தது. தற்போது இச்செய்தி இணையதளத்தில் வைரலாகி வந்தது.
மதுரையில் பிரமாண்ட திருமணம்
கடந்த 4 ஆம் தேதி மதுரையில் உள்ள நாகமலை புதுக்கோட்டையில் முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ ஆன தமிழரசின் மகள் கீர்த்திக்கும், கொடிமங்கலம் வி.பி.வைத்தியநாதனின் மகன் வெற்றிவேலுக்கும் பிரமாண்டமான முறையில் திருமணம் நடந்தது.
அத்திருமணத்தில் தனது மகளுக்காக ஆடு முதல் கார் வரை சீர்வரிசை கொடுத்துள்ளார். அந்த சீர்வரிசையின் மதிப்பு மட்டுமே 2 கோடி இருக்கும் என்றும் தெரிகிறது. அந்த 2 கோடி மதிப்பிலான சீர்வரிசை மதுரை மக்களயே வாயடைக்க செய்தது.
சீர்வரிசை “ஆடு முதல் கார் வரை “
முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ தனது மகளுக்காக 2 கோடி மதிப்பிலான சீர்வரிசை கொடுத்துள்ளார். அவை தங்கத்தட்டு முதல் வீட்டு உபயோகப்பொருட்கள் வரை மண்டபத்தில் கடலைபோல் அடுக்கிவைக்கப்பட்டு இருந்தது. இவற்றுடன் மேலும் ஆடு,கார்,மோட்டார் பைக் மற்றும் ட்ராக்டர் என பல பொருள்களையும் வாங்கி கொடுத்துள்ளார்.
இவற்றின் மொத மதிப்பு 2 கோடி மதிப்பில் இருக்கும். திருமண விழாவிற்கு வந்தவர்கள் இதனை கண்டு ஆச்சரியம் மற்றும் அல்லாமல் வியப்புடனும் பார்த்தனர். இதன் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையதளத்தில் வெளியிட்டதால் தற்போது வைரலாகி வந்த நிலையில் யார் வீட்டு திருமணம்? என்ற கேள்வியும் எழுந்தது.