வடகிழக்கு பருவமழை ஓவர் – தமிழ்நாட்டில் இனிமே வெயில் தான்!!

0

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தமிழகத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஓய்ந்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் மதிய நேர தகவலின்படி தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வறண்ட வானிலை

தமிழகத்தில் கடந்த இரு வாரங்களாக கொட்டிதீர்த்த கனமழை தற்போது ஓய்ந்துள்ளது. வடகிழக்கு பருவமழை மற்றும் இலங்கையை ஒட்டிய மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு முழுவதும் கனமழை பெய்துவந்தது. வரலாறு காணாத மழை காரணமாக தென்தமிழகத்தில் திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட இடங்களில் அனைத்து நீர்தேக்கங்களும் நிறைந்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது சென்னை வானிலை மையத்தின் மதிய நேர அறிவிப்பின் படி தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் இன்னும் 24 மணிநேரத்திற்கு வறண்ட வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை ஜனவரி 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் இலங்கை கிழக்கு கடற்கரை பகுதிகளை ஒட்டி நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழையும் மற்ற இடங்களை வறண்ட வானிலையும் நிலவும்.

இந்திய அணியின் மகத்தான வெற்றி – சுந்தர் பிச்சை ட்வீட்!!

தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்ஸியஸ் ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்ஸியஸ் ஆகவும் காணப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here