வெற்றிக்கோப்பையுடன் நடராஜன் – ரஹானேயின் நெகிழ வைக்கும் சம்பவம்!!

0
India celebrates winning on day five of the fourth test match between Australia and India at the Gabba in Brisbane, Australia, January 19, 2021. AAP Image/Darren England via REUTERS ATTENTION EDITORS - THIS IMAGE WAS PROVIDED BY A THIRD PARTY. NO RESALES. NO ARCHIVE. AUSTRALIA OUT. NEW ZEALAND OUT

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று முடிவடைந்தது. இந்தியஅணியின் அபாரமான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றி கொடிகட்ட முடிந்தது. இது வரலாறு காணாத வெற்றி என ஏராளமான பெரும்புள்ளிகள் இந்தியஅணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

கோப்பையுடன் நடராஜன்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்தியஅணி ஆஸ்திரேலியாவில் சுற்றுபயணம் செய்து அனைத்து தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. தற்போது நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 2-1 என்ற புள்ளிகளில் வீழ்த்தி இந்திய அணி அபாரமான வெற்றி பெற்றுள்ளது. இளம்வீரர்களான சுப்மான் கில் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தால் இந்தியா வெற்றிகனியை ருசித்திருக்கிறது.

இனிமேல் அப்படி பண்ண மாட்டேன் – பிக்பாஸ் ஷிவானி அதிரடி முடிவு!!

வெற்றி பெற்ற இந்திய அணிக்கு ஆலன் பார்டர் – சுனில் கவாஸ்கர் வெற்றிக்கோப்பை வழங்கப்பட்டது. கோப்பையை பெற்றுக்கொண்ட இந்திய அணியின் கேப்டன் ரஹானே அதை தமிழக வீரரான டி. நடராஜன் கையில் கொடுத்தது அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது. நடராஜன் இந்திய அணியின் நெட் பவுலராக பயிற்சிக்கு ஆஸ்திரேலியா சென்றார். அங்கு நடந்த அனைத்து தர போட்டிகளிலும் பங்கேற்று இந்திய அணியின் வெற்றிக்கு ஒரு பாதையாக இருந்தவர் என்று கூறினால் மிகையாகாது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கையில் கோப்பையுடன் நடராஜன் நிற்க அனைவரும் குழுபுகைப்படம் எடுத்து கொண்டனர். கடந்த டிசம்பரில் ஆஸ்திரேலியாவுடன் நடந்த டி 20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து அணியின் கேப்டன் விராட்கோலி அந்த போட்டியில் தனது சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்திய நடராஜனுக்கு டி 20 வெற்றிகோப்பையை கையில் வழங்கி சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here