இனிமேல் அப்படி பண்ண மாட்டேன் – பிக்பாஸ் ஷிவானி அதிரடி முடிவு!!

0

பிக்பாஸ் சீசன் 4 ல் கலந்து கொண்ட பிரபல நடிகை ஷிவானி ரசிகர்களை கிறங்கடிக்கக்கூடிய கவர்ச்சிகரமான போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். இனிமேல் இத்தகைய போட்டோக்களை பதிவிடமாட்டேன் என தற்போது முடிவு எடுத்துள்ளாராம்.

இனிமேல் கவர்ச்சி இல்லை

ஷிவானி பிக்பாஸ் சீசனில் கலந்துகொள்ளாததற்க்கு முன்னமே ஒரு கூட்டம் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருந்தார். தினமும் விதவிதமாக வித்தியாசமாக போட்டோ சூட்களை நடத்தி அவற்றை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவரின் மீது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.

விடுதலை செய்யப்படுவாரா பேரரறிவாளன்?? உச்ச நீதிமன்றத்தில் நாளை இறுதி விசாரணை!!

ஆனால் பிக்பாஸ் வீட்டுக்குள் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு அவரது பங்களிப்பு இல்லை என சமூகவலைதளங்களில் பேச்சுகள் அடிபட்டு வந்தது. மேலும் ஷிவானியின் அம்மா பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று அவருக்கு ரைடு விட்டதெல்லாம் சேர்த்து சமூகவலைதளங்களில் கேள்விக்குள்ளானது. தற்போது பிக்பாஸ் முடிந்து வெளிவந்திருக்கும் ஷிவானி ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

தான் இனிமேல் கவர்ச்சியான படங்களை சமூகவலைதளங்களில் வெளியிடபோவதில்லை என அவரது நட்பு வட்டாரங்களில் தெரிவித்துள்ளாராம். தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சியான பழைய பதிவுகளை டெலீட் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எப்படி இருந்தாலும் இந்த தகவலால் அவரது ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here