அடுத்த 48 மணிநேரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும் – சென்னை வானிலை மையம் தகவல்!!

0

தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வறண்ட வானிலையாக காட்சியளிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வானிலை தகவல்:

வரும் 20.01.2021 மற்றும் 21.01.2021 ஆகிய தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் ஏனைய மாவட்டங்களில் வானம் பெரும்பாலும் வறண்ட வானிலையாக காட்சியளிக்கும். மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காட்சியளிக்கும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் காலை நேரங்களில் லேசான பனிமூட்டமும் காணப்படும். வெப்பநிலை அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 21 டிகிரி செல்சியசும் நிலவும். கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கொட்டாரம் மற்றும் மைலாடி ஆகிய பகுதிகளில் தலா 2 மிமீ மழை பதிவாகியுள்ளது.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 24 மணிநேரத்தில் ஒருவர் உயிரிழப்பு – உத்திரபிரதேசத்தில் பரிதாபம்!!

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

இன்று தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே வானிலை மையம் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் நாளை வடகிழக்கு பருவமழையானது தென் மாநிலங்களில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here