தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!

0
Rain
Rain

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் வேளையில் அடுத்த 24 மணிநேரத்தில் 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

வானிலை அறிக்கை:

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்குப் பருவக்காற்று காரணமாக மேற்குத் தொடர்ச்சி மழையை ஒட்டியுள்ள மாவட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் தெரிவித்து உள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் அதிகபட்சமாக 39 டிகிரி வரை வெப்பநிலை பதிவாகும்.

மதுரை சலூன் கடைக்காரர் மகள் ஐ.நா.நல்லெண்ண தூதர் – பிரதமர் மோடி பாராட்டு

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

புதுச்சேரியின் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதியில் 40-50 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. மத்திய மேற்கு வங்கக்கடலின் கிழக்குப் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here