6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

0
weather forecast
weather forecast

அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக அனைத்து இடங்களிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கனமழை:

வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள கடலூர், விழுப்புரம் மற்றும் புதுவையை ஒட்டியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. நாகப்பட்டினம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, தேனி போன்ற மாவட்டங்களில் மிக அதிகமான கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

7 மற்றும் 8 ஆம் தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் இதே நிலை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் தான் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வெப்பநிலை மற்றும் மழைப்பதிவு:

தமிழகத்தில் வெப்பநிலை குறைந்தபட்சமாக 24 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் அதிகபட்சமாக 29 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக செங்கல்பட்டு, தாம்பரம் பகுதிகளில் 21 செ.மீ மழை பதிவாகியுள்ளது, சோழிங்கநல்லூர், திருவள்ளுர் பகுதிகளில் 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

விஜய் டிவியில் சித்ராவின் கடைசி தருணங்கள் – ப்ரோமோவை பார்த்து கதறும் ரசிகர்கள்!!

இத்துடன் மீனவர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இன்று மற்றும் நாளை தென்கிழக்கு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் இதனை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here