தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழக மீனவர்களுக்கு எந்த வித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.
தமிழகத்தில் மீண்டும் கனமழை:
தமிழகத்தில் இன்று ராமநாதபுரம், தூத்துகுடி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக அதிகமான கனமழை பெய்யும். நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, விருதுநகர், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘சித்ராவிற்கும் எனக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை’ – ஹேமந்த் ஜாமின் மனு தாக்கல்!!
ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. நாளை (08/01/2021) ராமநாதபுரம், தூத்துக்குடி, நீலகிரி, மதுரை, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
மழைப்பதிவு:
நாளை மறுநாள் (09/01/2021) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் கனமழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆம் தேதி ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திருச்சி மற்றும் கரூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை அதிகபட்சமாக 29 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் குறைந்தபட்சமாக 24 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்கத்தில் உள்ள 3 மாவட்டங்களில் மிக அதிகமான கனமழை பெய்துள்ளது. 13 மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கடலூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் 21 செ.மீ கனமழை பதிவாகியுள்ளது, குறைந்தபட்சமாக கரூர், திருவள்ளுர் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது.