தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் பரவலாக பல மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து கனமழை:
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கனமழை பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் பெய்து வருகிறது. வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் தான் காரணமாக கூறப்படுகிறது.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் விழுப்புரம், கள்ளகுறிஞ்சி, கடலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் மற்ற மாவட்டங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
வெப்பநிலை மற்றும் மழைப்பதிவு:
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வெப்பநிலை அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவையான பாகற்காய் வறுவல் – இந்த மாதிரி செஞ்சு கொடுத்தா குழந்தைகள் மிச்சமே வைக்க மாட்டாங்க!!
புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகமபட்சமாக 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது, மானாமதுரை, மணப்பாறை போன்ற பகுதிகளில் 6 செ.மீ மழை பதிவாகியுள்ளத, பரமக்குடி, திருப்பூர், காரைக்கால், நாகப்பட்டினம் பகுதிகளில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கு எந்த வித எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்படவில்லை.