தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமின்றி புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இதே நிலையே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வறண்ட வானிலை
கடந்த சில நாட்களாக வறண்ட வானிலேயே பெரும்பாலான மாவட்டங்களில் காணப்படுகின்றது. இதனை அடுத்து தற்போது வானிலை ஆய்வு மையம் அடுத்த 4 நாட்களுக்கான வானிலை அறிக்கையினை வெளியிட்டுள்ளது. அது, அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே காணப்படும். மழை பெய்வதற்கான அறிகுறி எதுவும் கிடையாது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவிற்கு மேகமூட்டத்துடன் தான் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் தமிழகம் மற்றும் பிற பகுதிகளில் வெப்பநிலை குறைந்தபட்சமாக 21 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் அதிகபட்சமாக 31 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைக்கைதிகள் அதிகமுள்ள மாநிலங்களில் உ.பி முதலிடம் – மத்திய அரசு தகவல்!!
வானம் மேகமூட்டத்துடன் தான் இருக்கும் என்ற காரணத்தால் தமிழக மீனவர்களுக்கு எந்த வித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. அதே போல் பரவலாக எந்த இடத்திலும் மழை பதிவாகவில்லை.