‘சித்ராவிற்கும் எனக்கும் ஏற்கனவே திருமணம் நடந்துவிட்டது’ – விசாரணையில் ஹேமந்த் வாக்குமூலம்!!

0

சின்னத்திரை நடிகையான VJ சித்ரா தற்போது தற்கொலை செய்துகொண்ட விவகாரம் அவரது ரசிகர்கள் பலரையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் சித்ராவுக்கும், தனக்கும் 2 மாதங்களுக்கு முன்பே திருமணம் நடந்துவிட்டதாக ஹேமந்த் வாக்குமூலத்தில் கூறியுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

VJ சித்ரா

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிகைகளில் ஒருவராகிய சித்ரா மக்கள் மத்தியில் பிரபலமானவர். சித்துக்காகவே இந்த சீரியலை பார்ப்பவர்கள் தான் அதிகம். இந்த ஒரு சீரியலிலேயே இவருக்கு ரசிகர்கள் ஏராளமானார்கள். இந்த நிலைக்கு வருவதற்கு சித்ராவிற்கு அவ்வளவு எளிதான காரியமாக இருக்கவில்லை. பல வருட உழைப்பிற்கு கிடைத்த வெற்றி தான் இந்த பெயரும், புகழும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த அளவிற்கு கொடிக்கட்டி பறந்து வரும் நிலையில் இப்பொழுது அவர் தற்கொலை செய்துகொண்டது பலரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது. இதுவரையிலும் ஒரு வீர மங்கையாகவே சித்ராவை பார்த்த நமக்கு இப்படி செய்துகொள்வார் என்று யாரும் எதிர்பார்க்கவும் இல்லை.

அவரது வருங்கால கணவருடன் ஹோட்டலில் தங்கியிருந்த சித்ரா குளிப்பதற்காக உள்ளே சென்றவர் தூக்கு மாட்டி இறந்துள்ளார். இதனால் அங்கே இருந்த ஹேமந்த் உட்பட அனைவரையும் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். ஹேமந்திடம் இதனை பற்றி விசாரிக்கையில் தனக்கும், சித்ராவிற்கும் 2 மாதங்களுக்கு முன்பாகவே திருமணம் நடந்ததாக கூறியுள்ளார்.

கல்யாணத்தை தடுத்து நிறுத்த போராடும் அகிலன் – தாலி கட்டுவாரா பாரதி??

chithra and her future husband

இந்த தகவல் பலரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது. மேலும் சித்ரா பல நாட்களாக மனஅழுத்ததில் இருந்ததாகவும் ஹேமந்த் கூறியுள்ளார். திருமணம் நடந்ததற்கான முறையான ஆவணங்களை காண்பித்தால் மட்டுமே இதனை உறுதிசெய்ய முடியும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். சித்ராவின் முகம் முழுவதும் காயங்கள் வேறு இருந்துள்ளது. இவரின் இறப்பு தற்கொலையா?? கொலையா?? என்பது மர்மமாகவே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here