விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதிக்கும், வெண்பாவிற்கும் திருமணம் நடக்கவிருக்கும் நிலையில் கண்ணம்மா வந்து தடுத்து நிறுத்துவரா?? என்ன நடக்கப் போகிறது என மக்கள் பலரும் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.
பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியை திருமணம் செய்துகொள்ள பல திட்டங்களை தீட்டி வரும் வெண்பா நேற்றைய எபிசோடில் பாரதியின் பழைய காதலியான ஹேமா தன் கனவில் வந்ததாகவும், உன்னை நன்றாக பார்த்துக்கொள்ள சொன்னதாகவும் கூறி பாரதியை குழப்பி விடுகிறார். அரைமனதாக இருந்து வந்த பாரதி இதனை கேட்டதும் கண்டிப்பாக திருமணம் செய்துகொள்ள வேண்டும் என முடிவு எடுக்கிறார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இன்றைய எபிசோடில் பாரதி பட்டுவேஷ்டியை பையில் வைத்துக்கொண்டு வருகிறார். அகிலனுக்கு இது சந்தேகமாக இருக்க, பாரதி போன பிறகு அவரை பின் தொடர்ந்து செல்கிறார். பாரதியும் இதனை கண்டுபிடித்து விடுகிறார். எப்படியோ தப்பித்துவிட்டு கோவிலுக்கு வந்து விடுகிறார். பாரதி நடந்தவற்றை வெண்பாவிடம் கூற வெண்பாவும் அதிர்ச்சியடைகிறார்.
மேலும் முதலில் வேகமாக திருமணம் செய்து கொள்வோம் மற்றதை அப்பறம் பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்கிறார். பாரதி கிளம்ப செல்ல வெண்பாவிற்கு ஏதோ தவறாக இருப்பது போல தோன்றுகிறது. தாலி கட்டும் நேரத்தில் ஐயர் பிரகாரத்தை சுற்றி வருகிறார். வேறு வழியில்லாமல் கடுப்புடன் வெண்பாவும் பாரதியை அழைத்துக்கொண்டு செல்ல அப்பொழுது பாரதி வீட்டில் வேலை பார்த்த பெண் இவர்களை பார்த்து விடுகிறார்.
கோப்பையை தூக்கி கொடுத்த கோஹ்லி, பாண்ட்யா!!
உடனே சௌந்தர்யாவிற்கு கால் செய்ய அவரது போன் போகவில்லை. பிறகு அஞ்சலிக்கு கால் செய்ய அவரும் அதிர்ச்சியடைகிறார். அப்பொழுது அஞ்சலி தனது அம்மாவிற்கு கால் செய்து சொல்ல அவர் இதனை உடனடியாக தடுத்து நிறுத்த சொல்கிறார். வெண்பா திருமணம் ஆகி வீட்டிற்க்கு வந்தால் நம்மை விரட்டி விடுவாள் என்று கூற அஞ்சலி இதனை உடனடியாக அகிலனிடம் சென்று சொல்கிறார்.
அகிலனும் வேகமாக கிளம்பி செல்ல அஞ்சலியிடம் நீ இந்த அளவுக்கு யோசிக்க மாட்டியே என்ன விஷயம் என்று கேட்க தன் அம்மா கூறியதை அனைத்தையும் கூறுகிறார். அகிலனும் அதான பாத்தேன் நீயாவது இதெல்லாம் பண்றதாவது என்று கூறி கோவப்படுகிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது. எப்படி இந்த கல்யாணத்தை தடுத்து நிறுத்துவார்கள், பாரதிக்கு எப்பொழுதாவது உண்மை தெரியவருமா?? வரும் எபிசோடுகளில் பொறுத்திருந்து பாப்போம்.