கொரோனா ஊரடங்கு காரணமாக தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில் பலர் ரேஷன் கடைகளில் கிடைக்கும் இலவச பொருள்களை நம்பிதான் தன் அன்றாட வாழ்க்கையை நடத்துகின்றனர். இந்நிலையில் புது அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
ஸ்மார்ட் ரேஷன் கார்டு:
கொரோனா ஊரடங்கு காரணமாக பலர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அதை சரி செய்யும் நோக்கில் அரசு பல சலுகைகளை வழங்கியுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள அணைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை போன்றவை வழங்கப்பட்டது. மேலும் அனைத்து அட்டைதாரர்களுக்கும் 1000 ரூபாய் வழங்கப்பட்டது. மேலும் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013 ன் கீழ் ஒன் நேஷன், ஒன் ரேஷன் கார்டு, ஒன் நேஷன் ஒன் ரேஷன் கார்டு போன்ற திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அந்த வகையில், டிசம்பர் மாதத்திற்கும் இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்த தமிழக அரசு, அதற்கான டோக்கன்களையும் வழங்கியுள்ளது. அதன்படி, டிசம்பர் 2, 3, 5 ஆகிய தேதிகளில் PHH மற்றும் AAY ரேஷன் அட்டைதாரர்களும், 7, 8 , 9, 10 ஆகிய தேதிகளில் NPHH அட்டைதாரர்களும் பொருட்களைப் பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நிவர் புயல் சேதங்களை சீரமைக்க ரூ.74.24 கோடி!!
குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் ஸ்மார்ட் கார்டில் போட்டோவுக்கு கீழ் PHH அல்லது AAY என்று இருந்தால், 5 கிலோ கொண்டைக் கடலை இலவசமாக இம்மாதம் வழங்கப்படும் என்றும், NPHH என்று இருந்தால், 1 கிலோ துவரம் பருப்பு இலவசமாக நியாயவிலை கடைகளில் வழங்கப்படும் என்றும், மற்ற பொருட்கள் வழக்கம் போலவும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.