இந்திய அணியில் டெஸ்ட், T20, ODI என அனைத்திலும் நம்பர் 1 ஆட்ட நாயகனாக வலம் வருபவர் தான் விராட் கோலி. இவர் இந்திய அணியில் படைத்த சாதனைக்கு அளவே கிடையாது. மேலும் IPL தொடரிலும் எண்ணற்ற சாதனைகள் படைத்துள்ளார். இந்நிலையில் தற்போது இவர் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதாவது கிரிக்கெட் வீரர்களில் அதிக சம்பளம் வாங்கும் வீரராக திகழும் இவர் தற்போது 1000 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இவர் கிரிக்கெட் போட்டி மட்டுமல்லாது, விளம்பரம் சமூக வலைதளம் ஆகியவற்றின் மூலமும் பணம் சம்பாதித்து வருகிறார். இது தவிர பல நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார்.
இனி டைவர்ஸ் செய்தால் பணி நீக்கம் கன்பார்ம்., உத்தரவால் ஊழியர்கள் ஷாக்!!!
இப்படி அனைத்திலும் ஆதிக்கம் செலுத்தும் இவர் கிரிக்கெட் போட்டியில் மட்டும் ஒரு ஆண்டுக்கு 7 கோடி வருமானம் கிடைக்கிறதாம். அதாவது ஒரு நாள் போட்டிக்கு 6 லட்சமும், ஒரு T20 போட்டிக்கு 3 லட்சமும், ஒரு டெஸ்ட் போட்டிக்கு 15 லட்சமும், உள்ளூர் 20 ஓவர் கிரிக்கெட் லீக் போட்டிக்கு 15 கோடியும் சம்பளமாக கிடைக்கிறதாம்.