நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட இந்த ஆண்டு அதிகமாக இருந்ததால் மாணவர்களின் நலன் கருதி அந்தந்த மாநில அரசு பள்ளிகள் திறப்பதை தள்ளி வைத்துக் கொண்டே வந்தனர். இந்நிலையில் கோடை விடுமுறைக்குப் பிறகு சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் வெயிலின் தாக்கம் இன்னும் கொஞ்சம் கூட குறையாததால் பெற்றோர்கள் பள்ளிகளை திறப்பதை மீண்டும் தள்ளி வைக்க கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும் இந்த வெயிலால் தெலுங்கானா மாநிலம் ஆசிபாத் மாவட்டத்தில் 8 வயது மகேஸ்வரி என்ற சிறுமி உயிரிழந்த சம்பவம் அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
என்னப்பா சொல்றீங்க.., விராட் கோலியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?., வெளியான தகவல் !!!
மேலும் சில மாணவிகள் உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பெற்றோர்கள் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறப்பதை தள்ளிவைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வரும் நிலையில் கல்வித்துறை அதிகாரிகள், மாநில முதலமைச்சர் இது குறித்து இன்னும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.