செந்தில் பாலாஜியை தொடர்ந்து சிக்கலில் சிக்கிய அடுத்த அமைச்சர்., ஐகோர்ட் பகீர் உத்தரவு!!!

0
செந்தில் பாலாஜியை தொடர்ந்து சிக்கலில் சிக்கிய அடுத்த அமைச்சர்., ஐகோர்ட் பகீர் உத்தரவு!!!
செந்தில் பாலாஜியை தொடர்ந்து சிக்கலில் சிக்கிய அடுத்த அமைச்சர்., ஐகோர்ட் பகீர் உத்தரவு!!!

தமிழகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது முறைகேடு செய்ததாக அவரை அமலாக்கத் துறையினர் கைது செய்துள்ளனர். இதனை தொடர்ந்து 2007-11 ஆம் ஆண்டுகளில் திமுக ஆட்சியில் சுரங்கம் மற்றும் கனிம வளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி குவாரி உரிமத்தை தனது மகன், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

 

இது தொடர்பான வழக்கு விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இந்த வழக்கை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் பொன்முடி மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தார். இதனை பரிசீலித்த நீதிபதிகள், “வரம்பை மீறி அதிக அளவில் செம்மண் எடுத்ததால் அரசுக்கு 28 கோடி வருவாய் இழப்பு” ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அடக்கடவுளே..,வெயிலின் தாக்கத்தால் பரிதாபமாக உயிரிழந்த மாணவி .., விடுமுறையை நீட்டிக்க பெற்றோர்கள் கோரிக்கை !!!

இதன் காரணமாக “அமைச்சர் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கை தள்ளுபடி செய்ய முடியாது” எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளனர். எனவே அமைச்சர் செந்தில் பாலாஜியை தொடர்ந்து அமைச்சர் பொன்முடிக்கும் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக வட்டாரங்களில் பேசி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here