பாலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் சஞ்சய் தத். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கேஜிஎப் பார்ட் 2 திரைப்படம் வசூலில் சக்க போடு போட்டது. அதில் வில்லனாக நடித்து தியேட்டரையே அரள விட்ட இவர் தற்போது தளபதி விஜய் நடிக்கும் லியோ திரைப்படத்தில் மாஸ் வில்லனாக நடித்து வருகிறார். சமீபத்தில் புற்று நோயால் அவதிப்பட்டு வந்த அவர் கடந்து வந்த பாதையை குறித்து பிரபல இயக்குனர் ஒரு ஷாக்கிங் தகவலை தெரிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதாவது சஞ்சய் தத் வாழ்க்கை பயணத்தை மையமாக வைத்து இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி என்பவர் சஞ்சு என்ற படத்தை இயக்கினார். இப்படத்தின் மூலமாக தான் அவரின் முழு சுயரூபம் வெளியே வந்துள்ளது. அவர் 308 பெண்களுடன் உடலுறவு வைத்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது. இது குறித்து ராஜ்குமார் ஹிரானி கூறியதாவது, அவர் டேட் செய்ய நினைக்கும் பெண்ணை முதலில் கல்லறைக்கு அழைத்து சென்று தனது அம்மாவை அறிமுகப்படுத்தி வைப்பாராம்.
அப்போது அவர் செண்டிமெண்டாக பேசி அவர்களை வலையில் விழ வைத்து டேட்டிங் செய்து விடுவாராம். இப்படிதான் 308 பெண்களை அவர் டேட்டிங் செய்தாராம். இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் அவர் கல்லறையில் காட்டுவது அவருடைய அம்மாவே கிடையாதாம். இந்த சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.