தமிழகத்தில் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ஆம் அண்ணா பிறந்தநாள் அன்று செயல்பட உள்ளது. இது மட்டுமல்லாமல் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு பொங்கல் பரிசு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளும் அவ்வப்போது வழங்கப்படுகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதன் காரணமாக கூட்டு குடும்பமாக இருந்த பலரும் பழைய ரேஷன் கார்டுகளை நீக்கி விட்டு, தனித்தனியாக புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். திமுக ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளே ஆன நிலையில், இதுவரை கிட்டத்தட்ட 15 லட்சம் பேருக்கு புதிய ரேஷன் கார்டு விநியோகிக்கப்பட்டுள்ளது.
ஒரே வீட்டில் உள்ளவர்களும் தனித்தனி ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பிப்பதால், இனி புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களின் வீடுகளை அதிகாரிகள் ஆய்வு செய்ய திட்டமிட்டு வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.