நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் சீனாவின் செஜியாங் நகரை சேர்ந்த ஒரு நிறுவனம், தங்களது ஊழியர்களின் குடும்பங்களின் அன்பையும், விசுவாசத்தையும் ஊக்குவிக்க புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதாவது இந்த நிறுவனத்தில் பணிபுரியும் திருமணமான ஊழியர்கள் கள்ள உறவு, விவாகரத்து உள்ளிட்ட நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என எச்சரித்துள்ளனர். உத்தரவை மீறி செயல்படுபவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதை ஒரு விதிமுறையாக அந்த நிறுவனம் அறிவித்ததால் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.