தமிழகத்தில் நேற்று வரை சூரியன் சுட்டெரித்து கொண்டிருந்த நிலையில், சென்னை உள்பட சில முக்கிய மாவட்டங்களில் கனமழை பெய்து வெயிலின் தாக்கத்தை தணித்து குளிர்ச்சியைத் ஏற்படுத்தியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்ய போகும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை மையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களான காஞ்சி, சென்னை, விருதுநகர், வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, குமரி உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த செய்தியை அறிந்த அம்மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.