விஜய் டிவி சூப்பர் சிங்கரில் பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ் அவரது மனைவி ராஜலஷ்மி. இவர்கள் நாட்டுப்புற பாடல் கைதேர்ந்தவர்கள். தற்போது இவர்கள் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பாடல் ஒன்றை பாடியுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
எங்கிருந்து எவனோ வர்றானாம்
எங்கிருந்து எவனோ வர்றானாம்.. எல்லாரையும் வந்து கொல்றானாம். கத்தியை தீட்டு புள்ள. நானா அவனா பாத்துடுவோம் என செந்தில் கணேஷ் குரலில் ஆரம்பிக்கிறது பாடல். அதற்கு பதில் சொல்லும் விதத்தில் ராஜலட்சுமி பாடுவார்.
தயவு செஞ்சு யாரும் வெளியே வராதீங்க – வடிவேலு கொரோனா விழிப்புணர்வு வீடியோ.!
எங்கிருந்தோ வர்றது கொரோனா வைரஸ் கிருமி கொரோனா புத்தியை மட்டும் தீட்டு மச்சான் அவனானு பாத்திடலாம் என்று ராஜலட்சுமி பாடுவது, கொரோனாவை புத்தியால்தான் விரட்ட முடியும். நீங்கள் அறிவை உபயோகித்து அதற்கான வழியை தேட வேண்டும் என்பது போல இருக்கும். லரும் இந்த பாடலை கேட்டு ரசித்து வருகின்றனர். மேலும் அருமையாக இருப்பதாகவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
செந்தில் கணேஷ், ராஜலட்சுமி பாடி பட்டிதொட்டியெல்லாம் பிரபலமான பாடலான சின்ன மச்சான் பாடலை பிரபுதேவாவின் சார்லி சாப்ளின் 2 படத்துக்காக பயன்படுத்தினர். பின்னர் சிம்புவின் வந்தா ராஜாவாத்தான் வருவேன், விஸ்வாசம், குண்டு, சூர்யாவின் சூரரைப் போற்று உள்ளிட்ட படங்களில் பாடியுள்ளார் செந்தில்கணேஷ்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |