200 புதிய ஆம்புலன்சுகள், டெக்னீசியன்கள் & செவிலியர் காலிப்பணியிடங்களை அவசரமாக நிரப்பும் தமிழக அரசு – கொரோனா தடுப்பில் தீவிரம்..!

2

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பல்வேறு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழக அரசில் காலியாக உள்ள மருத்துவர், செவிலியர் மற்றும் டெச்னிசியன் போன்ற காலிப்பணியிடங்களை அவசரமாக நிரப்பி வருகிறது.

200 புதிய ஆம்புலன்சுகள்:

தமிழகத்தில் இதுவரை 35 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு உள்ளது. தற்போது சமூக பரவலாக மாறியுள்ள கொரோனவை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில்,

  • புதிதாக 200 ஆம்புலன்சுகள் பயன்பாட்டுக்கு கொண்டுவர முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
  • 1,000 செவிலியர்கள், 1508 லேப் டெக்னிஷியன்கள் காலிப்பணியிடங்கள் தற்போது நிரப்பப்பட்டு உள்ளன.
  • மேலும் 530 மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
  • புதிதாக பணியில் அமர்த்தப்பட்ட அனைவரும் 3 நாட்களுக்குள் பணியில் சேர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here