இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் தங்கம், வெள்ளியின் விலையில் மாற்றம் ஏற்படாது என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளதால் பொதுமக்கள் கவலை அடைந்து உள்ளனர்.
இன்றைய விலை நிலவரம்:
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் (22 கேரட்) விலை சவரனுக்கு 592 ரூபாய் அதிகரித்து 33,528 ரூபாயாக உள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 4,191 க்கு விற்கப்படுகிறது.
தூய தங்கத்தின் (24 கேரட்) விலை ஒரு கிராமுக்கு 74 ரூபாய் உயர்ந்து ரூ.4,389 ஆக உள்ளது. ஒரு சவரன் ரூ.35,112 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
வெள்ளியை பொறுத்தவரை மாற்றமின்றி நேற்றைய விலையில் விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 41,700 ஆக உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |