கொரோனாவால் தற்போது தமிழகம் முழுவதும் பீதியில் காணப்படுகிறது. கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக கண்காணிப்புடன் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். இதில் சிவகங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவர் மதுரையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்தார். அவர் தப்பித்து தன் காதலியை காண சென்றுள்ளார். இந்த நிகழ்வு அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தப்பி ஓட்டம்
சிவகங்கை மாவட்டம் வளையதாரணிப்பட்டியை சேர்ந்த விஜய் 24 வயது நபர் கடந்த சில நாட்களாக மதுரையில் உள்ள கொரோனா சிகிச்சை முகாமில் சிகிச்சை பெற்றுவந்தார் இதனிடையில் நேற்று காலை விஜய் மதுரை முகாமிலிருந்து தப்பி ஓடி சிவகங்கையில் உள்ள தனது காதலியை சந்தித்துள்ளார்.
21 நாள் எப்படி வீட்டுலயே இருக்குறதுனு யோசிக்கிறீங்களா.?? அப்போ இத கண்டிப்பா படிங்க.!
இதனையறிந்த அவனியாபுர போலீஸ் SI சண்முகநாதன் தலைமையிலான போலீஸ் விஜய் யை பிடித்து வந்து சின்ன உடைப்பு முகாமில் மாலை ஒப்படைத்தனர்.இந்நிலையில் கொரோனா சிகிச்சை பெற்றுவந்த நபர் முகாமிலிருந்து தப்பிஓடி காதலியை சந்தித்ததால் அந்த பெண்ணுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகத்தால் விஜயின் காதலிக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |