தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதை மீறி வெளியே சுற்றுபவர்களுக்கு பல இடங்களில் காவல்துறையினர் பிரம்பு வைத்தியம் கொடுத்தாலும், கன்னியாகுமரி மாவட்ட போலீசார் வித்தியாசமான முறையை கையாண்டு உள்ளனர்.
தவறான விடைக்கு தோப்புக்கரணம்..!
தமிழக மருத்துவர்களும், காவல் துறையினரும் கொரோனா வைரஸ் என்ற கொடிய அரக்கனிடம் இருந்து பொதுமக்களை காப்பாற்ற தங்களது உயிரைப் பணயம் வைத்து உழைத்து வருகின்றனர். பொதுமக்களாகிய நாம் அவர்களுக்கு செய்யும் பெரும் உதவியே வீட்டை விட்டு வெளியே வராமல் ஊரடங்கு உத்தரவை முறையாக கடைபிடிப்பது தான்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்களை டூவீலருடன் பிடித்த போலீசார் நூதனமாக ஒரு 10 வினாக்கள் கொண்ட வினாத்தாளை கொடுத்து டெஸ்ட் வைத்து உள்ளனர். அதில் கொரோனா வைரஸிற்கான அறிகுறி முதல், அதன் காதலி யார் என்பது வரை வேற லெவலில் வினாக்கள் கேட்டு இருந்தனர். தடை உத்தரவை மீறியவர்களும் அதற்கு விடையளித்து மதிப்பெண் பெற்று உறுதிமொழி ஏற்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |