நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது போலீசாரிடம் வாக்குவாதம் செய்யம் இளைஞரின் வீடியோ வைரலாக பரவி வருகிறது.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு
கொரோனா வைரஸை தடுப்பதற்காக நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
போலீஸ் கண்டிப்பு – வைரல் வீடியோ..!
3 போலீசார் ஒரு இளைஞரை பார்த்து ஏன் வெளியே சுற்றுகிறாய் என கேட்ட போது அவர் அவர்களிடம் என் உரிமை மறுக்கப்படும்போது போராட்டம் வெடிக்கும். எனக்கு கொரோனா வரும் என்றால் உங்களுக்கும் வரும். என கூறினார். அதற்கு அந்த போலீஸ் இதையெல்லாம் CM ஐ போய் கேள் என கூறியதற்கு. அவன் CM ஐ இங்கே வரசொல்லுங்க, ஓட்டு கேட்க மட்டும் வரராருல இப்பயும் வர சொல்லுங்க என பேசுகிறார்.
அதே இளைஞர் போலீஸ் ஸ்டேஷன் அழைத்து செல்லப்பட்டு போலீசாரால் “சிறப்பான கவனிப்பை” பெற்றபின் தான் பாதுகாப்பாக வீட்டிற்குள்ளேயே இருப்பேன் என கூறுகிறார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |