விஜய் டிவியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சி குறித்த தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
நீயா நானா:
தனியார் தொலைக்காட்சியில் 16 வருடங்களாக மக்களை கட்டுக்குள் வைத்திருக்கும் நிகழ்ச்சி என்றால் அது நீயா நானா ஷோ தான். இந்த ஷோவை ஆரம்பித்ததில் இருந்து தற்போது வரை ஆங்கர் கோபிநாத் தான் தொகுத்து வருகிறார். இதில் கோபி பேசும் கருத்துள்ள பேச்சுக்களை கேட்பதற்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அந்த வகையில் இந்த வார எபிசோட் குறித்து தற்போது தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிக்காக இருக்கும் நயன்தாராவின் வாடகை தாய் சர்ச்சை குறித்து தான். இந்த வார எபிசோடில் வாடகை தாய் குறித்து விவாதம் நடந்துள்ளது. ஒரு பக்கம் ஆதரிப்பவர்களும், எதிர் பக்கம் எதிர்ப்பவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
அர்ச்சனா குழந்தையை மாற்றியதை கண்டுபிடிக்கும் ஜெஸ்ஸி.., அம்பலமான பித்தலாட்டம்!!
மேலும் சொத்து பத்து நிறைய இருந்தா இந்த மாதிரி வேலைகளை செய்கிறார்கள் என்று நடிகை நயன்தாராவை ஜாடை மாடையாக பேசியுள்ளதாக கூறப்படுகிறது. அப்படி என்னவெல்லாம் பேசியுள்ளார் என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். மேலும் விஜய் டிவி டிஆர்பி காக நயன்தாராவை சூசகமாக பேசியுள்ளார்கள் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.