அர்ச்சனா குழந்தையை மாற்றியதை கண்டுபிடிக்கும் ஜெஸ்ஸி.., அம்பலமான பித்தலாட்டம்!!

0
அர்ச்சனா குழந்தையை மாற்றியதை கண்டுபிடிக்கும் ஜெஸ்ஸி.., அம்பலமான பித்தலாட்டம்!!
அர்ச்சனா குழந்தையை மாற்றியதை கண்டுபிடிக்கும் ஜெஸ்ஸி.., அம்பலமான பித்தலாட்டம்!!

ராஜா ராணி சீரியல் இப்பொழுது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. அதாவது ஆரம்பத்தில் அர்ச்சனா மற்றும் சந்தியாவிற்கு தான் சண்டை நடந்து கொண்டிருந்தது. ஆனால் இப்பொழுது ஜெசி மற்றும் அர்ச்சனா இடையே தான் பெரிய சண்டை நடந்து கொண்டுள்ளது. முதலில் அந்த கடையை யார் வாங்குவது என்ற போட்டி மும்முறமாக இருந்து வந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

இப்பொழுது சரவணன் செந்திலிடையே யார் இந்த தேர்தலில் நிற்பது என்ற போட்டி வலுத்து வருகிறது. ஆகமொத்தம் ஒற்றுமையாக இருந்த குடும்பத்தில் இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக விரிசல் வர ஆரம்பித்து விட்டது. சிவகாமி இதனால் நொந்து போய் உள்ளார். ஒரு பக்கம் சந்தியா அந்த பரிசை வாங்கி சொந்த ஊரிலேயே போஸ்டிங் வாங்கி விட வேண்டும் என்று வேண்டிக் கொண்டுள்ளார். இன்னொரு பக்கம் குடும்பம் பிரியும் சூழ்நிலையில் இருப்பதால் இதனை தடுக்க வேண்டும் என்று போராடிக் கொண்டுள்ளார்.

அடக்கடவுளே.., யாஷிகாவுக்கு மறுபடியும் ரத்த காயமா?? வைரலாகும் பகிர் புகைப்படம்!!

இப்படி சீரியல் ஓடிக்கொண்டிருக்க இன்னொரு மர்மம் முடிச்சு அவிழ உள்ளது. அதாவது ஜெஸ்ஸிக்கு அர்ச்சனா மீது கொஞ்சம் சந்தேகம் வந்துவிட்டது. குழந்தை பிறந்தபோதே, செந்திலுக்கு சந்தேகம் இருந்தது. ரெண்டு பேருமே வெள்ளையா தான் இருக்கோம், குழந்தை மட்டும் எப்படி கருப்பா பொறக்கும் என்று. இந்நிலையில் அர்ச்சனா இன்றைய எபிசோட்டில் அவரது நிஜ குழந்தையை காப்பாற்றியதும் பதட்டமானதும் அனைவருக்கும் பெரிய ஷாக். அர்ச்சனா இப்படிப்பட்ட ஆள் கிடையாது என்று ஜெசிக்கு சந்தேகம் வருகிறது. ஜெசி ஐபிஎஸ் படித்து கொண்டிருப்பதால் இதில் உள்ள விஷயத்தை கண்டுபிடிக்க ஆர்வம் காட்டுவாராம் கடைசியில் அர்ச்சனாவின் உண்மை முகம் வெளிவர சிவகாமி வீட்டை விட்டு அனுப்பி விடுவாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here